-
உபாகமம் 33:13-17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
“அவனுடைய தேசம் யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்படட்டும்.+
வானத்திலிருந்து பனித்துளியும் ஆசீர்வாதங்களும் அங்கே பொழியட்டும்.
ஆழத்திலிருந்து ஊற்றுகள் பொங்கி எழட்டும்.+
14 சூரிய வெளிச்சத்தில் அழகான செடிகொடிகள் முளைக்கட்டும்.
ஒவ்வொரு மாதமும் நல்ல விளைச்சல் கிடைக்கட்டும்.+
15 என்றென்றுமுள்ள* மலைகள் வளங்களை வாரி இறைக்கட்டும்.+
அழியாத குன்றுகள் பொக்கிஷங்களைக் கொடுக்கட்டும்.
16 பூமி எல்லா செல்வங்களையும் தரட்டும்.+
முட்புதரில் தோன்றிய கடவுள்+ ஆசீர்வாதம் பொழியட்டும்.
எல்லாமே யோசேப்பின் தலைமேல் இறங்கட்டும்.
சகோதரர்களில் விசேஷமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவனின் உச்சந்தலைமேல் வரட்டும்.+
17 அவனுடைய கம்பீரம் காளையின் முதல் கன்றைப் போன்றது.
அவனுடைய கொம்புகள் காட்டு எருதின் கொம்புகள் போன்றவை.
அவற்றால் ஜனங்களை அவன் முட்டி மோதுவான்,
அவர்கள் எல்லாரையும் பூமியெங்கும் விரட்டியடிப்பான்.
அந்தக் கொம்புகள்தான் எப்பிராயீமின் பத்தாயிரக்கணக்கான வீரர்கள்.+
அந்தக் கொம்புகள்தான் மனாசேயின் ஆயிரக்கணக்கான வீரர்கள்” என்று சொன்னார்.
-