-
மல்கியா 1:2, 3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 “நான் உங்களை நேசித்தேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.
ஆனால் நீங்கள், “எந்த விதத்தில் எங்களை நேசித்தீர்கள்?” என்று கேட்கிறீர்கள்.
அதற்கு யெகோவா, “யாக்கோபின் அண்ணன்தானே ஏசா?+ ஆனால், நான் யாக்கோபை நேசித்தேன், ஏசாவை வெறுத்தேன்.+ 3 அவனுடைய மலைகளைப் பாழாக்கினேன்.+ அவனுக்குச் சொந்தமான இடத்தைக் காட்டு நரிகளுக்குக் கொடுத்துவிட்டேன்”+ என்று சொல்கிறார்.
-
-
ரோமர் 9:10-13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 அதுமட்டுமல்ல, நம்முடைய மூதாதையான ஈசாக்கின் மூலம் ரெபெக்காள் இரட்டைக் குழந்தைகளைக் கருத்தரித்தபோது,+ 11 அதாவது இன்னும் அந்தக் குழந்தைகள் பிறக்காமலும் நல்லதோ கெட்டதோ செய்யாமலும் இருந்தபோது, “பெரியவன் சின்னவனுக்கு அடிமையாக இருப்பான்” என்று அவளிடம் சொல்லப்பட்டது.+ 12 “யாக்கோபை நேசித்தேன், ஏசாவை வெறுத்தேன்” என்று எழுதப்பட்டும் இருக்கிறது.+ 13 அதனால், கடவுளுடைய நோக்கத்தின்படி மனிதர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது அவர்களுடைய செயல்களைச் சார்ந்தில்லை, தேர்ந்தெடுக்கிற அவரையே எப்போதும் சார்ந்திருக்கிறது.
-