-
யாத்திராகமம் 27:1-8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
27 பின்பு அவர், “வேல மரத்தால் ஒரு பலிபீடத்தை நீ செய்ய வேண்டும்.+ அதன் நீளம் ஐந்து முழமும்,* அகலம் ஐந்து முழமும், உயரம் மூன்று முழமுமாக இருக்க வேண்டும். அது சதுரமாக இருக்க வேண்டும்.+ 2 அதன் நான்கு மூலைகளிலும் கொம்புகள்+ வைக்க வேண்டும். அந்தக் கொம்புகள் பலிபீடத்துடன் இணைந்தபடி இருக்க வேண்டும். பலிபீடத்துக்கு செம்பினால் தகடு அடிக்க வேண்டும்.+ 3 பலிபீடத்துக்கான கிண்ணங்களையும், முள்கரண்டிகளையும், சாம்பல் அள்ளும் வாளிகளையும் கரண்டிகளையும், தணல் அள்ளும் கரண்டிகளையும் செய்ய வேண்டும். அதன் பாத்திரங்கள் எல்லாவற்றையும் செம்பினால் செய்ய வேண்டும்.+ 4 பலிபீடத்துக்காக செம்பினால் ஒரு கம்பிவலையைச் செய்ய வேண்டும். அந்தக் கம்பிவலைக்கு மேலாக நான்கு மூலைகளிலும் நான்கு செம்பு வளையங்களைப் பொருத்த வேண்டும். 5 அந்தக் கம்பிவலையைப் பலிபீடத்தின் விளிம்புக்குக் கீழே பாதி உயரத்தில் செருகி வைக்க வேண்டும். 6 பலிபீடத்துக்காக வேல மரத்தால் கம்புகள் செய்து, அவற்றுக்குச் செம்பினால் தகடு அடிக்க வேண்டும். 7 பலிபீடத்தைத் தூக்கிக்கொண்டு போவதற்காக அதன் இரண்டு பக்கங்களிலும் இருக்கிற வளையங்களில் இந்தக் கம்புகளைச் செருகி வைக்க வேண்டும்.+ 8 நான்கு பக்கங்களிலும் பலகைகள் அடித்து, கீழேயும் மேலேயும் திறந்திருக்கிறபடி இந்தப் பலிபீடத்தைச் செய்ய வேண்டும். மலையில் நான் உனக்குக் காட்டிய மாதிரியின்படியே* அதைச் செய்ய வேண்டும்.+
-