10 50-ஆம் வருஷத்தை நீங்கள் புனிதமாக்கி, தேசத்திலுள்ள எல்லாருக்கும் விடுதலையை* அறிவிக்க வேண்டும்.+ அந்த வருஷம் உங்களுக்கு விடுதலை* வருஷமாக இருக்கும். அவரவர் தங்களுடைய பரம்பரை நிலத்துக்கும் தங்களுடைய குடும்பத்துக்கும் திரும்பிப்போக வேண்டும்.+
28 வாங்கியவனிடமிருந்து அதை மீட்க ஒருவேளை அவனுக்கு வசதி இல்லையென்றால், விடுதலை வருஷம்வரை அந்த நிலம் அதை வாங்கியவனின் கையில் இருக்கும்.+ விடுதலை வருஷத்தில் அது விற்றவனுக்குக் கைமாறிவிடும். அவன் தன்னுடைய நிலத்துக்குத் திரும்பிப்போவான்.+