-
2 நாளாகமம் 2:4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 இப்போது என்னுடைய கடவுளான யெகோவாவின் பெயருக்காக ஒரு ஆலயத்தைக் கட்டி, அவருக்கு அர்ப்பணிக்கப்போகிறேன்.* அவருடைய சன்னிதியில் நறுமண தூபப்பொருளை எரிப்பதற்காகவும்+ படையல் ரொட்டிகளை எப்போதும் வைப்பதற்காகவும்+ அதைக் கட்டப்போகிறேன்; காலையிலும் மாலையிலும்+ ஓய்வுநாட்களிலும்+ மாதப்பிறப்பு* நாட்களிலும்+ பண்டிகை நாட்களிலும்+ எங்கள் கடவுளான யெகோவாவுக்குத் தகன பலிகள் செலுத்துவதற்காக அதைக் கட்டப்போகிறேன். ஏனென்றால், இது இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிரந்தரக் கட்டளை.
-
-
நெகேமியா 10:32, 33பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
32 நாங்கள் ஒவ்வொருவரும் வருஷா வருஷம் எங்கள் கடவுளின் ஆலயச் சேவைக்காக ஒரு சேக்கலில்* மூன்றிலொரு பாகத்தைக் கொடுப்பதாக உறுதிமொழி தருகிறோம்.+ 33 படையல் ரொட்டிகள்,+ தினமும் செலுத்துகிற* உணவுக் காணிக்கைகள்,+ ஓய்வுநாட்களிலும்+ மாதப் பிறப்புகளிலும்*+ செலுத்த வேண்டிய தகன பலிகள், பண்டிகைக்கால விருந்துகள்,+ பரிசுத்தமான பொருள்கள், இஸ்ரவேலர்களின் பாவப் பரிகார பலிகள்+ ஆகியவற்றுக்காகவும், எங்கள் கடவுளுடைய ஆலயத்தின் மற்ற எல்லா வேலைகளுக்காகவும் அந்தத் தொகையைக் காணிக்கையாகக் கொடுப்போம்.
-