உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 3:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 குருமார்களாகச் சேவை செய்ய ஆரோனையும் அவனுடைய மகன்களையும் நீ நியமிக்க வேண்டும்.+ ஆனால், தகுதி இல்லாத* யாராவது வழிபாட்டுக் கூடாரத்தின் பக்கத்தில் வந்தால் அவன் கொல்லப்பட வேண்டும்”+ என்றார்.

  • எண்ணாகமம் 18:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 பலிபீடத்திலும் திரைச்சீலையின் உள்ளேயும் குருமார்கள் செய்ய வேண்டிய வேலைகளை நீயும் உன் மகன்களும் கவனித்துக்கொள்ள வேண்டும்.+ குருத்துவச் சேவைக்கு நீங்கள்தான் பொறுப்பு.+ அதை நான் உங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறேன். தகுதி இல்லாத* யாராவது வழிபாட்டுக் கூடாரத்தின் பக்கத்தில் வந்தால் அவன் கொல்லப்பட வேண்டும்”+ என்றார்.

  • 2 நாளாகமம் 26:16-18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 வலிமைமிக்கவராக ஆனதும், அவருக்கு ஆணவம் தலைக்கேறியது. அதுவே அவருடைய அழிவுக்குக் காரணமானது. யெகோவாவின் ஆலயத்துக்குள்ளே நுழைந்து தூபபீடத்தில் தூபம் காட்டப் போனதன் மூலம் தன்னுடைய கடவுளான யெகோவாவின் கட்டளையை அவர் மீறினார்.+ 17 உடனே குருவாகிய அசரியாவும் யெகோவாவுக்குச் சேவை செய்துவந்த தைரியமுள்ள 80 குருமார்களும் அவருக்குப் பின்னால் போனார்கள். 18 அவர்கள் உசியா ராஜாவைத் தடுத்து, “உசியா, நீங்கள் யெகோவாவுக்குத் தூபம் காட்டுவது சரியில்லை! குருமார்கள் மட்டும்தான் தூபம் காட்ட வேண்டும்,+ அவர்கள்தான் ஆரோனின் வம்சத்தில் வந்தவர்கள்,+ அவர்கள்தான் இந்த வேலைக்காகப் புனிதப்படுத்தப்பட்டவர்கள். பரிசுத்த இடத்தைவிட்டு வெளியே போங்கள். நீங்கள் உண்மையில்லாமல் நடந்துகொண்டீர்கள். இப்படிச் செய்ததற்காக யெகோவா தேவனிடமிருந்து உங்களுக்கு எந்த மகிமையும் கிடைக்காது” என்று சொன்னார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்