-
எண்ணாகமம் 4:15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 இஸ்ரவேலர்கள் புறப்படும்போது, பரிசுத்த இடத்துக்கான எல்லா பொருள்களையும் ஆரோனும் அவனுடைய மகன்களும் போர்த்திவைக்க வேண்டும்.+ அதன்பின், கோகாத்தியர்கள் வந்து அவற்றை எடுத்துக்கொண்டு போக வேண்டும்.+ ஆனால், பரிசுத்த இடத்துக்கான பொருள்களை அவர்கள் தொடக் கூடாது. அப்படித் தொட்டால் அவர்கள் செத்துப்போவார்கள்.+ இவைதான் சந்திப்புக் கூடாரம் சம்பந்தமாக கோகாத்தியர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொருள்களாகும்.
-
-
எண்ணாகமம் 16:39, 40பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
39 அதனால் குருவாகிய எலெயாசார், நெருப்பில் பொசுங்கிய ஆட்களின் செம்புத் தூபக்கரண்டிகளைப் பலிபீடத்தைச் சுற்றிலும் பொருத்துவதற்காகத் தகடுகளாக அடித்தார். 40 யெகோவா மோசேயின் மூலம் சொன்னபடியே அவர் செய்தார். தகுதி இல்லாத யாரும், அதாவது ஆரோனின் வம்சத்தைச் சேராத யாரும், யெகோவாவின் முன்னிலையில் தூபம்காட்டக் கூடாது+ என்பதையும், கோராகுவையும் அவருடைய கூட்டாளிகளையும் போல யாரும் ஆகிவிடக் கூடாது+ என்பதையும் அந்தத் தகடுகள் இஸ்ரவேலர்களுக்கு ஞாபகப்படுத்தின.
-