உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 20:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள்.+ அப்போதுதான், உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்தில் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள்.+

  • உபாகமம் 21:18-21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 ஒருவேளை ஒரு மகன் பிடிவாதக்காரனாகவும், அடங்காதவனாகவும், அம்மா அப்பாவின் பேச்சைக் கேட்காதவனாகவும் இருக்கலாம்.+ அவனைத் திருத்துவதற்கு அவர்கள் எவ்வளவோ பாடுபட்டும் அவன் திருந்தாமல் இருந்தால்,+ 19 அவர்கள் அவனைப் பிடித்து நகரவாசலில் இருக்கிற பெரியோர்களிடம் கொண்டுபோக வேண்டும். 20 அங்கே அவர்களிடம், ‘இந்தப் பையன் ரொம்பப் பிடிவாதக்காரனாக இருக்கிறான், அடங்குவதே கிடையாது. எங்கள் பேச்சைக் கேட்பதே இல்லை. எப்போது பார்த்தாலும் குடித்துக்கொண்டும்+ தின்றுகொண்டும்+ இருக்கிறான்’ என்று சொல்ல வேண்டும். 21 அப்போது, அந்த நகரத்தின் ஆண்கள் எல்லாரும் அவனைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும். இப்படி, உங்கள் நடுவிலிருந்து தீமையை ஒழித்துக்கட்ட வேண்டும். இஸ்ரவேலர்கள் எல்லாரும் அதைக் கேட்டு பயப்படுவார்கள்.+

  • நீதிமொழிகள் 20:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 அப்பாவையும் அம்மாவையும் சபிக்கிறவனுடைய விளக்கு,

      இருள் சூழ்ந்துகொள்ளும் நேரத்தில் அணைக்கப்படும்.+

  • நீதிமொழிகள் 30:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 ஒருவன் தன் அப்பாவை ஏளனம் செய்து, அம்மாவின் பேச்சை மதிக்காமல் போனால்,+

      அவனுடைய கண்களைப் பள்ளத்தாக்கில் திரிகிற அண்டங்காக்கைகள் கொத்தி எடுக்கும்,

      இளம் கழுகுகள் அவற்றைத் தின்றுவிடும்.+

  • மத்தேயு 15:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 உதாரணமாக, ‘உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும்’+ என்றும், ‘அப்பாவையோ அம்மாவையோ கேவலமாகப் பேசுகிற* எவனும் கொல்லப்பட வேண்டும்’+ என்றும் கடவுள் சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்