உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 23:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 பொய் சொல்ல கடவுள் என்ன சாதாரண மனுஷனா?+

      மனம் மாறுவதற்கு அவர் என்ன மனுஷனா?+

      அவர் சொல்வதைச் செய்யாமல் இருப்பாரா?

      அவர் சொன்னதை நிறைவேற்றாமல் இருப்பாரா?+

  • 1 சாமுவேல் 2:31-34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 ஒரு காலம் வரும், அப்போது உன் பலத்தையும் உன் முன்னோர்களுடைய வம்சத்தாரின் பலத்தையும் அழிப்பேன். அதனால், உன் வம்சத்தாரில் ஒருவன்கூட முதிர்வயதுவரை உயிரோடிருக்க மாட்டான்.+ 32 இஸ்ரவேலர்கள் என்னுடைய ஆசீர்வாதங்களை அனுபவிக்கும்போது, நான் குடியிருக்கிற இடத்தில் நீ எதிரியைப் பார்ப்பாய்.+ உன் வம்சத்தில் இனி யாரும் முதிர்வயதுவரை உயிரோடிருக்க மாட்டார்கள். 33 என் பலிபீடத்தில் சேவை செய்ய உன் வம்சத்தில் நான் யாரை விட்டுவைக்கிறேனோ, அவனால் உன் கண்கள் இருண்டுபோகும், உன் மனம் துக்கத்தில் துவண்டுபோகும். உன் வம்சத்தாரில் ஏராளமானவர்கள் வாளுக்குப் பலியாவார்கள்.+ 34 நான் சொன்னதெல்லாம் நடக்கும் என்பதற்கு அடையாளமாக, உன் மகன்கள் ஓப்னியும் பினெகாசும் ஒரே நாளில் செத்துப்போவார்கள்.+

  • ஏசாயா 55:10, 11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 வானத்திலிருந்து பொழிகிற மழையும் பனியும்

      நிலத்தை நனைத்து, பயிர்களை வளர வைத்து,

      விதைக்கிறவருக்கு விதையையும் சாப்பிடுகிறவருக்கு உணவையும் தராமல் திரும்பிப் போவதில்லை.

      11 அதுபோலவே, என் வாயிலிருந்து வருகிற வார்த்தையும் இருக்கும்.+

      அது பலன் தராமல் என்னிடம் திரும்பி வராது.+

      நான் விரும்புவதை* நிச்சயம் நிறைவேற்றும்.+

      எதற்காக அதைச் சொன்னேனோ அதைக் கண்டிப்பாகச் செய்து முடிக்கும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்