-
2 ராஜாக்கள் 16:7, 8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 அப்போது, அசீரிய ராஜாவான திகிலாத்-பிலேசரிடம்+ ஆகாஸ் தன்னுடைய தூதுவர்களை அனுப்பி, “நான் உங்கள் ஊழியன், உங்கள் பிள்ளை. சீரியா ராஜாவும் இஸ்ரவேல் ராஜாவும் என்னைத் தாக்குகிறார்கள். நீங்கள் வந்து என்னைக் காப்பாற்றுங்கள்” என்று சொன்னார். 8 அதோடு, யெகோவாவின் ஆலயத்திலும் அரண்மனை கஜானாக்களிலும் இருந்த தங்கத்தையும் வெள்ளியையும் எடுத்து அசீரிய ராஜாவுக்கு லஞ்சமாக அனுப்பி வைத்தார்.+
-
-
1 நாளாகமம் 5:26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
26 அதனால், ரூபன் கோத்திரத்தாரையும் காத் கோத்திரத்தாரையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரையும் அசீரிய ராஜாவாகிய பூல் (அதாவது, அசீரிய ராஜாவாகிய தில்காத்-பில்நேசர்)+ சிறைபிடித்துக்கொண்டு போனான்; இஸ்ரவேலின் கடவுள்தான் அவன் மனதில் இந்த எண்ணத்தை ஏற்படுத்தினார்;+ சிறைபிடித்த மக்களை ஆலா, ஆபோர், ஆரா ஆகிய இடங்களுக்கும் கோசான் ஆற்றுப்பகுதிக்கும்+ அவன் கொண்டுபோனான். இன்றுவரை அவர்கள் அங்கேதான் குடியிருக்கிறார்கள்.
-