-
1 சாமுவேல் 30:23-25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 அதற்கு தாவீது, “என் சகோதரர்களே, அப்படிச் செய்யக் கூடாது. இது யெகோவா நமக்குக் கொடுத்தது. அவர்தான் நம்மைக் காப்பாற்றி, அந்தக் கொள்ளைக்கூட்டத்தாரை நம் கையில் கொடுத்தார்.+ 24 அதனால், நீங்கள் சொல்வதை யார் ஒத்துக்கொள்வார்கள்? போருக்குப் போனவர்களுக்கு மட்டுமல்ல, மூட்டைமுடிச்சுகளைக் காவல் காத்தவர்களுக்கும் பங்கு கிடைக்க வேண்டும்.+ எல்லாருக்கும் சரிசமமாகப் பங்கு கிடைக்க வேண்டும்”+ என்றார். 25 அன்றுமுதல் இஸ்ரவேலர்களுக்கு அதை ஒரு விதிமுறையாகவும் சட்டமாகவும் ஏற்படுத்தினார். இன்றுவரை அது அப்படித்தான் இருந்துவருகிறது.
-