உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 53:மேல்குறிப்பு-6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • இசைக் குழுவின் தலைவனுக்கு; மகலாத்* பாணி. மஸ்கீல்.* தாவீதின் பாடல்.

      53 முட்டாள்கள் தங்களுடைய இதயத்தில்,

      “யெகோவா என்று யாருமே கிடையாது” என்று சொல்கிறார்கள்.+

      அவர்கள் செய்யும் அக்கிரமங்கள் படுமோசமானவை, அருவருப்பானவை.

      ஒருவன்கூட நல்லது செய்வதில்லை.+

       2 ஆனால், கடவுள் பரலோகத்திலிருந்து மனிதர்களைப் பார்க்கிறார்.+

      யாராவது விவேகமாக* நடக்கிறார்களா, யெகோவாவைத் தேடுகிறார்களா என்று பார்க்கிறார்.+

       3 அவர்கள் எல்லாரும் வழிவிலகிப் போயிருக்கிறார்கள்.

      எல்லாரும் ஒரேபோல் சீர்கெட்டுப் போயிருக்கிறார்கள்.

      நல்லது செய்கிறவர்கள் யாருமே இல்லை.

      ஒருவன்கூட இல்லை.+

       4 தவறு செய்கிற யாருக்குமே புத்தி* இல்லையா?

      உணவை விழுங்குவதுபோல் அவர்கள் என் ஜனங்களை விழுங்குகிறார்கள்.

      அவர்கள் யெகோவாவைக் கூப்பிடுவதில்லை.+

       5 அதனால், பயங்கரமான திகில் அவர்களைப் பிடித்துக்கொள்ளும்.

      இதுவரை இல்லாத அளவுக்கு* அவர்கள் திகில் அடைவார்கள்.

      உன்னைத் தாக்குகிறவர்களின் எலும்புகளைக் கடவுள் சிதறிப்போகப் பண்ணுவார்.

      யெகோவா அவர்களை ஒதுக்கிவிட்டதால், நீ அவர்களைத் தலைகுனிய வைப்பாய்.

       6 சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு மீட்பு வரட்டும்!+

      சிறைபிடிக்கப்பட்ட தன் ஜனங்களை யெகோவா மறுபடியும் கூட்டிச்சேர்க்கும்போது,

      யாக்கோபு சந்தோஷப்படட்டும், இஸ்ரவேல் பூரித்துப்போகட்டும்.

  • ரோமர் 3:10-12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 எழுதப்பட்டிருக்கிறபடி, “நீதிமானே இல்லை, ஒருவன்கூட இல்லை.+ 11 விவேகமாக நடக்கிறவன் ஒருவன்கூட இல்லை, கடவுளைத் தேடுகிறவன் ஒருவன்கூட இல்லை. 12 எல்லா மனிதர்களும் வழிவிலகிப் போயிருக்கிறார்கள், எல்லாரும் கெட்டுப்போயிருக்கிறார்கள்; கருணை காட்டுகிறவனே இல்லை, ஒருவன்கூட இல்லை.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்