உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 14:1-7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 முட்டாள்கள் தங்களுடைய இதயத்தில்,

      “யெகோவா என்று யாருமே கிடையாது”+ என்று சொல்கிறார்கள்.

      அவர்கள் அக்கிரமம் செய்கிறார்கள், அவர்கள் செய்வதெல்லாம் அருவருப்பாக இருக்கிறது.

      ஒருவன்கூட நல்லது செய்வதில்லை.+

       2 ஆனால், யெகோவா பரலோகத்திலிருந்து மனிதர்களைப் பார்க்கிறார்.

      யாராவது விவேகமாக* நடக்கிறார்களா, யெகோவாவைத் தேடுகிறார்களா என்று பார்க்கிறார்.+

       3 அவர்கள் எல்லாரும் வழிவிலகிப் போயிருக்கிறார்கள்.+

      எல்லாரும் ஒரேபோல் சீர்கெட்டுப் போயிருக்கிறார்கள்.

      நல்லது செய்கிறவர்கள் யாருமே இல்லை,

      ஒருவன்கூட இல்லை.

       4 தவறு செய்கிற யாருக்குமே புத்தி* இல்லையா?

      உணவை விழுங்குவதுபோல் அவர்கள் என் ஜனங்களை விழுங்குகிறார்கள்.

      அவர்கள் யெகோவாவைக் கூப்பிடுவதில்லை.

       5 அதனால், பயங்கரமான திகில் அவர்களைப் பிடித்துக்கொள்ளும்.+

      ஏனென்றால், நீதிமான்களின் தலைமுறையோடு யெகோவா இருக்கிறார்.

       6 தவறு செய்கிறவர்களே, நீங்கள் எளியவனின் திட்டங்களைத் தவிடுபொடியாக்கப் பார்க்கிறீர்கள்.

      ஆனால், யெகோவா அவனுக்குத் தஞ்சமாக இருக்கிறார்.+

       7 சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு மீட்பு வரட்டும்!+

      சிறைபிடிக்கப்பட்ட தன் ஜனங்களை யெகோவா மறுபடியும் கூட்டிச்சேர்க்கும்போது,

      யாக்கோபு சந்தோஷப்படட்டும், இஸ்ரவேல் பூரித்துப்போகட்டும்.

  • ரோமர் 3:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 எழுதப்பட்டிருக்கிறபடி, “நீதிமானே இல்லை, ஒருவன்கூட இல்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்