உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 21:20, 21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 ஆகாப் எலியாவைப் பார்த்து, “எதிரியே,+ என்னைக் கண்டுபிடித்து இங்கேயும் வந்துவிட்டாயா?” என்று கேட்டார். அதற்கு எலியா, “ஆமாம், கண்டுபிடித்துவிட்டேன். கடவுள் சொல்வது என்னவென்றால், ‘யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்தே தீருவேன் என்று உறுதியாக இருக்கிறாயே.+ 21 அதனால் உனக்கு முடிவுகட்டுவேன், உன் வம்சத்தை அடியோடு அழிப்பேன்; ஆகாபின் வீட்டிலிருக்கிற எல்லா ஆண்களையும்,* ஆதரவற்றவர்களையும் அற்பமானவர்களையும்கூட, ஒழித்துக்கட்டுவேன்.+

  • 2 ராஜாக்கள் 10:10, 11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள், ஆகாபின் வீட்டாரைப் பற்றி யெகோவா சொன்ன எல்லாமே நிறைவேறும். யெகோவா சொன்ன ஒரு வார்த்தைகூட நிறைவேறாமல் போகாது.*+ தன்னுடைய ஊழியரான எலியா மூலம் சொன்னதைத்தான் யெகோவா இப்போது செய்திருக்கிறார்”+ என்று சொன்னார். 11 பின்பு, யெஸ்ரயேலில் மீதியிருந்த ஆகாபின் வம்சத்தார் எல்லாரையும் யெகூ கொன்றுபோட்டார். ஆகாபுக்கு நெருக்கமான பிரமுகர்கள், நண்பர்கள், அவனுடைய குருமார்கள்+ ஆகிய எல்லாரையும் கொன்றுபோட்டார். ஆகாபுடைய ஆட்கள் ஒருவரைக்கூட விட்டு வைக்கவில்லை.+

  • எரேமியா 22:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 யெகோவா சொல்வது இதுதான்: ‘யோயாக்கீமின்+ மகனும் யூதாவின் ராஜாவுமான கோனியாவே,*+ நீ என் வலது கையில் ஒரு முத்திரை மோதிரமாக இருந்தாலும் நான் உன்னைக் கழற்றி எறிவேன்! இதை என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்.*

  • எரேமியா 22:30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 யெகோவா சொல்வது இதுதான்:

      ‘இவனுக்கு வாரிசே இல்லை என்றும்,

      வாழ்க்கையில் இவன் வெற்றி பெறவே மாட்டான் என்றும் எழுதுங்கள்.

      ஏனென்றால், இவனுடைய பிள்ளைகள் யாருமே தாவீதின் சிம்மாசனத்தில் உட்கார மாட்டார்கள்.

      அவர்கள் யாருமே இனி யூதாவை ஆட்சி செய்ய மாட்டார்கள்.’”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்