-
2 ராஜாக்கள் 25:6, 7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 கல்தேய வீரர்கள் ராஜாவைப் பிடித்து,+ ரிப்லாவில் இருந்த பாபிலோன் ராஜாவிடம் கொண்டுபோனார்கள். அங்கே அவருக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது. 7 சிதேக்கியாவின் கண் முன்னாலேயே அவருடைய மகன்களைப் படுகொலை செய்தார்கள். பின்பு, நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவருக்குச் செம்பு விலங்குகளை மாட்டி அவரை பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.+
-
-
எரேமியா 38:17, 18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 அப்போது எரேமியா சிதேக்கியாவிடம், “பரலோகப் படைகளின் கடவுளும் இஸ்ரவேலின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘நீ பாபிலோன் ராஜாவுடைய அதிகாரிகளிடம் சரணடைந்தால் உயிர்பிழைப்பாய். இந்த நகரமும் தீ வைத்துக் கொளுத்தப்படாது. நீயும் உன் குடும்பத்தாரும் தப்பித்துக்கொள்வீர்கள்.+ 18 ஆனால், அந்த அதிகாரிகளிடம் நீ சரணடையாவிட்டால் இந்த நகரம் கல்தேயர்களிடம் கொடுக்கப்படும். நகரத்தை அவர்கள் தீ வைத்துக் கொளுத்துவார்கள்.+ அவர்களுடைய கையிலிருந்து உன்னால் தப்பிக்கவே முடியாது’”+ என்று சொன்னார்.
-