-
2 ராஜாக்கள் 24:11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 அவனுடைய வீரர்கள் முற்றுகையிட்ட சமயத்தில், பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரும் அந்த நகரத்துக்கு வந்தான்.
-
-
எரேமியா 28:1-3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
28 அதே வருஷத்தில், அதாவது சிதேக்கியா ராஜா+ யூதாவை ஆட்சி செய்த நான்காம் வருஷம் ஐந்தாம் மாதத்தில், கிபியோனைச்+ சேர்ந்த ஆசூரின் மகனாகிய அனனியா தீர்க்கதரிசி யெகோவாவின் ஆலயத்துக்கு வந்தான். அங்கே குருமார்களுக்கும் எல்லா ஜனங்களுக்கும் முன்னால் என்னிடம் இப்படிச் சொன்னான்: 2 “இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘பாபிலோன் ராஜாவின் நுகத்தடியை நான் உடைத்துப்போடுவேன்.+ 3 பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார் யெகோவாவின் ஆலயத்திலிருந்து கொண்டுபோன எல்லா பாத்திரங்களையும் இரண்டே வருஷத்தில் மறுபடியும் இங்கே கொண்டுவருவேன்.’”+
-
-
தானியேல் 1:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
1 யூதாவின் ராஜா யோயாக்கீம்+ ஆட்சி செய்த மூன்றாம் வருஷத்தில், பாபிலோனின் ராஜா நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து அதைச் சுற்றிவளைத்தான்.+ 2 உண்மைக் கடவுளான யெகோவா, யூதாவின் ராஜா யோயாக்கீமை நேபுகாத்நேச்சாரின் கையில் கொடுத்துவிட்டார்.+ அதோடு, ஆலயத்திலிருந்த பாத்திரங்கள் சிலவற்றை அவன் எடுத்துக்கொண்டு போவதற்கும் விட்டுவிட்டார். அவன் அந்தப் பாத்திரங்களை சினேயார்*+ தேசத்திலிருந்த தன் தெய்வத்தின் கோயிலுக்கு எடுத்துக்கொண்டு போய், அதன் பொக்கிஷ அறையில் வைத்தான்.+
-