-
2 ராஜாக்கள் 24:11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 அவனுடைய வீரர்கள் முற்றுகையிட்ட சமயத்தில், பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரும் அந்த நகரத்துக்கு வந்தான்.
-
-
எரேமியா 27:16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 குருமார்களிடமும் எல்லா ஜனங்களிடமும் இப்படிச் சொன்னேன்: “யெகோவா சொல்வது இதுதான்: ‘“இதோ, யெகோவாவின் ஆலயத்திலிருந்து பாபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்ட பாத்திரங்கள் சீக்கிரத்திலேயே திரும்பக் கொண்டுவரப்படும்”+ என்று சொல்கிற தீர்க்கதரிசிகளின் பேச்சைக் கேட்காதீர்கள். அவர்கள் பொய்த் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள்.+
-
-
தானியேல் 1:2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 உண்மைக் கடவுளான யெகோவா, யூதாவின் ராஜா யோயாக்கீமை நேபுகாத்நேச்சாரின் கையில் கொடுத்துவிட்டார்.+ அதோடு, ஆலயத்திலிருந்த பாத்திரங்கள் சிலவற்றை அவன் எடுத்துக்கொண்டு போவதற்கும் விட்டுவிட்டார். அவன் அந்தப் பாத்திரங்களை சினேயார்*+ தேசத்திலிருந்த தன் தெய்வத்தின் கோயிலுக்கு எடுத்துக்கொண்டு போய், அதன் பொக்கிஷ அறையில் வைத்தான்.+
-