-
எண்ணாகமம் 14:18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 ‘யெகோவா சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர்,+ குற்றத்தையும் மீறுதலையும் மன்னிப்பவர். ஆனால், குற்றவாளியை அவர் ஒருபோதும் தண்டிக்காமல் விட மாட்டார். தகப்பன்கள் செய்யும் குற்றத்துக்காக மகன்களையும் மூன்றாம் நான்காம் தலைமுறைகளைச் சேர்ந்தவர்களையும் தண்டிப்பார்’ என்று நீங்கள் வாக்குறுதி கொடுத்திருக்கிறீர்கள்.+
-
-
நெகேமியா 9:17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 உங்களுடைய பேச்சைக் கேட்க மறுத்தார்கள்.+ நீங்கள் செய்த மாபெரும் அற்புதங்களை மறந்தார்கள். அவர்கள் முரட்டுப் பிடிவாதம் பிடித்து, எகிப்துக்கே அடிமைகளாய்த் திரும்பிப் போவதற்காக ஒரு தலைவரை நியமித்தார்கள்.+ ஆனால் கடவுளே, நீங்கள் மன்னிக்கிறவர்,* கரிசனையும்* இரக்கமும் உள்ளவர், சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர்.+ அதனால் நீங்கள் அவர்களைக் கைவிடவில்லை.+
-
-
மீகா 7:18, 19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 உங்களைப் போன்ற கடவுள் யாரும் இல்லை.
உங்களுடைய ஜனங்களில் மீதியாக இருப்பவர்களின்+ குற்றத்தையும் பாவத்தையும் நீங்கள் மன்னிக்கிறீர்கள்.+
நீங்கள் என்றென்றைக்கும் கோபமாக இருக்க மாட்டீர்கள்.
ஏனென்றால், மாறாத அன்பு காட்டுவதில் பிரியப்படுகிறீர்கள்.+
19 அவர் மறுபடியும் நமக்கு இரக்கம் காட்டுவார்;+ நம் அக்கிரமங்களை ஒழித்துக்கட்டுவார்.
நம்முடைய எல்லா பாவங்களையும் ஆழ்கடலுக்குள் போட்டுவிடுவார்.+
-