-
2 நாளாகமம் 30:8, 9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 உங்கள் முன்னோர்களைப் போல நீங்கள் பிடிவாதமாக இருக்காதீர்கள்.+ யெகோவாவுக்கு அடிபணிந்து நடங்கள். உங்களுடைய கடவுளான யெகோவா நிரந்தரமாகப் புனிதப்படுத்திய ஆலயத்துக்கு வந்து,+ அவருக்குச் சேவை செய்யுங்கள். அப்போதுதான், உங்கள்மீது அவருக்கு இருக்கிற கடும் கோபம் குறையும்.+ 9 நீங்கள் யெகோவாவிடம் திரும்பி வந்தால், உங்களுடைய சகோதரர்களையும் மகன்களையும் பிடித்துக்கொண்டு போனவர்கள் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்கள்,+ அவர்களை மறுபடியும் இந்தத் தேசத்துக்கே திருப்பி அனுப்புவார்கள்.+ உங்கள் கடவுளான யெகோவா கரிசனையுள்ளவர்,* இரக்கமுள்ளவர்.+ நீங்கள் அவரிடம் திரும்பி வந்தால் அவர் முகத்தைத் திருப்பிக்கொள்ள மாட்டார்”+ என்று சொன்னார்கள்.
-
-
செப்பனியா 2:2, 3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 தண்டனைத் தீர்ப்பு நிறைவேறுவதற்கு முன்பே,
பதரைப் போல அந்த நாள் பறந்துபோவதற்கு முன்பே,
யெகோவாவின் கோபம் உங்கள்மேல் கொட்டப்படுவதற்கு முன்பே,+
யெகோவாவுடைய கோபத்தின் நாள் உங்களுக்கு எதிராக வருவதற்கு முன்பே,
3 பூமியில் குடியிருக்கிற மனத்தாழ்மையுள்ள* ஜனங்களே,
யெகோவாவுடைய நீதியான சட்டங்களைப் பின்பற்றுகிறவர்களே,
யெகோவாவைத் தேடுங்கள்,+ நீதிநெறிகளைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்.
அப்போது, அவருடைய கோபத்தின் நாளிலே நீங்கள் அநேகமாக* பாதுகாக்கப்படலாம்.+
-