-
யாத்திராகமம் 29:26-28பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
26 பின்பு, ஆரோனைக் குருவாக நியமிக்கும்போது செலுத்தப்படுகிற செம்மறியாட்டுக் கடாவின் மார்க்கண்டத்தை* எடுத்து,+ அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்டு. அது உனக்குச் சேர வேண்டிய பங்கு. 27 நீ அசைவாட்டுகிற அந்த மார்க்கண்டத்தையும் பரிசுத்த பங்காகிய கால் பகுதியையும் புனிதப்படுத்து. அவை ஆரோனையும் அவனுடைய மகன்களையும் குருமார்களாக நியமிக்கும்போது செலுத்தப்படுகிற செம்மறியாட்டுக் கடாவிலிருந்து+ எடுக்கப்பட்டவை. 28 இஸ்ரவேலர்கள் அவற்றை ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் கொடுக்க வேண்டும். இதை ஒரு நிரந்தரக் கட்டளையாகப் பின்பற்ற வேண்டும்.+ ஏனென்றால், அவை ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் சேர வேண்டிய பரிசுத்தமான பங்கு. இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்குச் சமாதான பலிகளைச் செலுத்தும்போதெல்லாம் அவை ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் பரிசுத்த பங்காகக் கொடுக்கப்பட வேண்டும்.+
-