-
எண்ணாகமம் 32:20-22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 அதற்கு மோசே அவர்களிடம், “போர் செய்வதற்காக நீங்கள் ஒவ்வொருவரும் யெகோவாவின் முன்னிலையில் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு,+ 21 யோர்தானைக் கடந்து போனால், யெகோவா தன்னுடைய எதிரிகளை விரட்டியடித்த பின்பு,+ 22 அதாவது யெகோவா அந்தத் தேசத்தை வீழ்த்திய பிறகு,+ நீங்கள் திரும்பி வரலாம்.+ அப்போது யெகோவாவுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் முன்னால் குற்றமற்றவர்களாக இருப்பீர்கள். யெகோவாவின் முன்னிலையில் இந்தத் தேசம் உங்களுக்குச் சொந்தமாகும்.+
-
-
எண்ணாகமம் 32:25-29பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 அப்போது, காத் வம்சத்தாரும் ரூபன் வம்சத்தாரும் மோசேயிடம், “எஜமானே, உங்கள் கட்டளைப்படியே உங்கள் ஊழியர்களாகிய நாங்கள் செய்வோம். 26 எங்கள் மனைவிமக்கள் எல்லாரும் எங்கள் வீட்டு விலங்குகளோடு கீலேயாத்தின் நகரங்களில் குடியிருப்பார்கள்.+ 27 ஆனால் எஜமானே, உங்கள் ஊழியர்களாகிய நாங்கள், நீங்கள் சொல்கிறபடியே, யெகோவாவின் முன்னிலையில் போர் செய்வதற்கு ஆயுதங்களை எடுத்துக்கொண்டு யோர்தானைக் கடந்துபோவோம்”+ என்றார்கள்.
28 அதனால், இவர்களைப் பற்றி குருவாகிய எலெயாசாருக்கும் நூனின் மகன் யோசுவாவுக்கும் இஸ்ரவேலின் தந்தைவழிக் குடும்பத் தலைவர்களுக்கும் மோசே இப்படிக் கட்டளை கொடுத்தார்: 29 “காத் வம்சத்தாரும் ரூபன் வம்சத்தாரும் யெகோவாவின் முன்னிலையில் போர் செய்வதற்கு ஆயுதங்கள் எடுத்துக்கொண்டு உங்களோடு யோர்தானைக் கடந்து வந்தால், அந்தத் தேசமும் உங்கள்முன் வீழ்ச்சி அடைந்தால், கீலேயாத் பிரதேசத்தை இவர்களுடைய பங்காகக் கொடுத்துவிடுங்கள்.+
-