உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 25:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 அந்த இடத்தில் நான் உன் முன்னால் தோன்றுவேன், பெட்டியின் மூடிக்கு மேலிருந்து உன்னிடம் பேசுவேன்.+ இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்க வேண்டிய எல்லா கட்டளைகளையும் சாட்சிப் பெட்டியின் மேல் இருக்கிற இரண்டு கேருபீன்களின் நடுவிலிருந்து நான் உனக்குக் கொடுப்பேன்.

  • 1 சாமுவேல் 4:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 அதனால், வீரர்கள் சீலோவுக்கு ஆட்களை அனுப்பி, கேருபீன்களுக்கு மேலாக* சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும்+ பரலோகப் படைகளின் யெகோவாவுடைய ஒப்பந்தப் பெட்டியை அங்கிருந்து தூக்கிக்கொண்டு வந்தார்கள். ஏலியின் இரண்டு மகன்களான ஓப்னியும் பினெகாசும்+ உண்மைக் கடவுளின் ஒப்பந்தப் பெட்டியோடு இருந்தார்கள்.

  • 1 நாளாகமம் 13:6-11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 அந்தச் சமயத்தில் உண்மைக் கடவுளுடைய பெட்டி யூதாவுக்குச் சொந்தமான பாலாவில் இருந்தது,+ அதாவது கீரியாத்-யெயாரீமில் இருந்தது; கேருபீன்களுக்கு மேலே* அமர்ந்திருக்கும் யெகோவாவுடைய+ பெயரைச் சொல்லி, மக்கள் எல்லாரும் அந்தப் பெட்டிக்கு முன்னால் வேண்டிக்கொள்வார்கள். அந்தப் பெட்டியைக் கொண்டுவர தாவீதும் இஸ்ரவேல் மக்கள் எல்லாரும் புறப்பட்டுப் போனார்கள். 7 உண்மைக் கடவுளுடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து எடுத்து ஒரு புதிய மாட்டுவண்டியில் ஏற்றினார்கள்.+ ஊசாவும் அகியோவும் அந்த மாட்டுவண்டிக்கு முன்னால் நடந்துபோனார்கள்.+ 8 தாவீதும் இஸ்ரவேல் மக்கள் எல்லாரும் உண்மைக் கடவுளுக்கு முன்னால் உற்சாகம் பொங்கக் கொண்டாடினார்கள்; பாடல்களைப் பாடிக்கொண்டும், யாழ்கள், மற்ற நரம்பிசைக் கருவிகள், கஞ்சிராக்கள்+ ஆகியவற்றை இசைத்துக்கொண்டும், ஜால்ராக்களைத்+ தட்டிக்கொண்டும், எக்காளங்களை+ ஊதிக்கொண்டும் நடந்துபோனார்கள். 9 அவர்கள் கீதோனின் களத்துமேட்டுக்கு வந்தபோது, மாடுகள் தடுமாறியதால் கடவுளுடைய பெட்டி கீழே விழப்போனது. உடனே ஊசா தன்னுடைய கையை நீட்டி அந்தப் பெட்டியைப் பிடித்தான். 10 அதனால், ஊசாமீது யெகோவாவுக்குப் பயங்கர கோபம் வந்தது. ஊசா தன்னுடைய கையை நீட்டி அந்தப் பெட்டியைப் பிடித்ததால், அவனைக் கடவுள் கொன்றுபோட்டார்.+ அவன் அந்த இடத்திலேயே கடவுளுக்கு முன்னால் விழுந்து செத்தான்.+ 11 யெகோவா கடும் கோபத்தோடு ஊசாவைக் கொன்றுபோட்டதால் தாவீது கோபம்* அடைந்தார். அதனால், அந்த இடம் இன்றுவரை பேரேஸ்-ஊசா* என்று அழைக்கப்படுகிறது.

  • சங்கீதம் 80:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 80 இஸ்ரவேலின் மேய்ப்பரே,

      யோசேப்பை மந்தைபோல் நடத்துகிறவரே,+ கேளுங்கள்.

      கேருபீன்களுக்கு மேலாக* வீற்றிருக்கிறவரே,+ ஒளிவீசுங்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்