-
2 நாளாகமம் 36:17-19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 எனவே, கல்தேயர்களின் ராஜாவை அவர்களுக்கு விரோதமாக அனுப்பினார்.+ அவர்களுடைய ஆலயத்திலேயே+ இளைஞர்களை அவன் வாளால் வெட்டிக் கொன்றான்.+ இளைஞர்கள் என்றோ கன்னிப்பெண்கள் என்றோ பார்க்கவில்லை, வயதானவர்கள் என்றோ பலவீனமானவர்கள் என்றோ பரிதாபப்படவில்லை.+ சொல்லப்போனால், எல்லாவற்றையும் கடவுள் அவர்கள் கையில் கொடுத்துவிட்டார்.+ 18 உண்மைக் கடவுளின் ஆலயத்திலிருந்த எல்லா பாத்திரங்களையும் அவன் பாபிலோனுக்குக் கொண்டுபோனான். பெரிய பாத்திரங்கள், சிறிய பாத்திரங்கள் என எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போனான். யெகோவாவின் ஆலயத்திலிருந்த பொக்கிஷங்களையும், ராஜாவுக்கும் அவருடைய அதிகாரிகளுக்கும் சொந்தமான பொக்கிஷங்களையும் கொண்டுபோனான்.+ 19 உண்மைக் கடவுளின் ஆலயத்தைத் தீ வைத்துக் கொளுத்தினான்,+ எருசலேமின் மதிலை இடித்துப்போட்டான்,+ கோட்டைகள் எல்லாவற்றையும் சுட்டெரித்தான், மதிப்புமிக்க எல்லாவற்றையும் அழித்துப்போட்டான்.+
-