-
எரேமியா 27:19-22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 இந்த நகரத்தில் மீதியிருக்கிற பாத்திரங்களையும், தூண்களையும்,+ ‘செம்புக் கடல்’ தொட்டியையும்,*+ தள்ளுவண்டிகளையும்+ குறித்து பரலோகப் படைகளின் யெகோவா ஒரு செய்தி சொல்கிறார். 20 யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமின் மகன் எகொனியாவையும், யூதா மற்றும் எருசலேமின் பிரமுகர்களையும் நேபுகாத்நேச்சார் ராஜா எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போனபோது அவற்றை எடுத்துச் செல்லவில்லை.+ 21 இப்போது யெகோவாவின் ஆலயத்திலும் யூதாவின் ராஜாவுடைய அரண்மனையிலும் எருசலேமிலும் இருக்கிற மீதி பாத்திரங்களைக் குறித்து இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: 22 ‘“அவை பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.+ நான் நடவடிக்கை எடுக்கும் நாள்வரை அவை அங்கேயே இருக்கும். பின்பு, நான் அவற்றை மறுபடியும் இந்த இடத்துக்கே கொண்டுவருவேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.’”
-