-
2 சாமுவேல் 12:9-11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 அப்படியிருக்கும்போது, யெகோவாவின் வார்த்தையை அலட்சியப்படுத்திவிட்டு, அவருக்குப் பிடிக்காததை ஏன் செய்தாய்? ஏத்தியனான உரியாவை வாளால் வெட்டிக் கொன்றாய்!+ அவனை அம்மோனியர்களின் வாளுக்கு இரையாக்கிவிட்டு,+ அவனுடைய மனைவியை எடுத்துக்கொண்டாய்.+ 10 ஏத்தியனான உரியாவின் மனைவியை எடுத்துக்கொண்டு என்னை அவமதித்ததால், உன் வம்சத்தை எப்போதும் வாள் துரத்திக்கொண்டே இருக்கும்.’+ 11 மேலும் யெகோவா சொல்வது என்னவென்றால், ‘உன் சொந்த குடும்பத்தார் மூலமாகவே பயங்கரமான கஷ்டங்களை உனக்குக் கொடுப்பேன்.+ உன் கண்ணெதிரில் உன் மனைவிகளை வேறொருவனுக்குக் கொடுப்பேன்.+ அவன் பகிரங்கமாக* உன் மனைவிகளோடு உறவுகொள்வான்.+
-