உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 31:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 அவர்களுடைய முன்னோர்களுக்குத் தருவதாக வாக்குக் கொடுத்த தேசமாகிய+ பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்கு+ அவர்களை நான் கூட்டிக்கொண்டு வந்த பின்பு, அவர்கள் நன்றாகச் சாப்பிட்டுக் கொழுத்துப்போய் இருக்கும்போது,+ பொய் தெய்வங்களை வணங்கி, என்னை அவமதிப்பார்கள். என் ஒப்பந்தத்தை மீறுவார்கள்.+

  • 2 ராஜாக்கள் 17:13, 14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 யெகோவா தன்னுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரையும், தரிசனக்காரர்கள் ஒவ்வொருவரையும் அனுப்பி இஸ்ரவேலையும் யூதாவையும் எச்சரித்துக்கொண்டே இருந்தார்.+ “பொல்லாத வழிகளைவிட்டு மனம் திருந்துங்கள்!+ என்னுடைய கட்டளைகளுக்கும் சட்டதிட்டங்களுக்கும் கீழ்ப்படியுங்கள்; உங்களுடைய முன்னோர்கள் மூலம் நான் கொடுத்த எல்லா சட்டங்களுக்கும், என்னுடைய தீர்க்கதரிசிகள் மூலம் நான் சொன்ன எல்லா வார்த்தைகளுக்கும் கீழ்ப்படியுங்கள்” என்று சொல்லியிருந்தார். 14 ஆனால், அவர் பேச்சை அவர்கள் கேட்கவில்லை. தங்களுடைய கடவுளான யெகோவாமீது விசுவாசம் வைக்காத முன்னோர்களைப் போலவே இவர்களும் முரட்டுப் பிடிவாதம் பிடித்தார்கள்.+

  • நெகேமியா 9:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 நீங்கள் இவ்வளவு செய்தும், உங்கள் பேச்சைக் கேட்காமல் உங்களுடைய திருச்சட்டத்தை மீறினார்கள்.*+ உங்களிடம் திருந்தி வரும்படி எச்சரித்த உங்களுடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றார்கள். உங்களைத் துளியும் மதிக்காமல் அக்கிரமம் செய்தார்கள்.+

  • ஏசாயா 1:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 பாவம் செய்கிற ஜனங்களே! உங்களுக்கு ஐயோ கேடு!+

      நீங்கள் குற்றத்துக்குமேல் குற்றம் செய்கிறீர்கள்.

      அக்கிரமக்காரக் கும்பலே! கேடுகெட்ட பிள்ளைகளே!

      நீங்கள் யெகோவாவை ஒதுக்கித்தள்ளினீர்கள்.+

      இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளிடம் மரியாதை இல்லாமல் நடந்துகொண்டீர்கள்.

      அவரைவிட்டு விலகிப்போனீர்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்