உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 18:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 இவற்றில் எதையாவது செய்து உங்களை அசுத்தப்படுத்தாதீர்கள். ஏனென்றால், உங்களிடமிருந்து நான் துரத்திவிடுகிற ஜனங்கள் இப்படியெல்லாம் செய்து தங்களை அசுத்தமாக்கிக்கொண்டார்கள்.+

  • எண்ணாகமம் 35:33, 34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 நீங்கள் குடியிருக்கிற தேசத்தைத் தீட்டுப்படுத்தக் கூடாது. இரத்தம் சிந்தினால் தேசம் தீட்டுப்படும்.+ இரத்தம் சிந்தியவனுடைய இரத்தத்தைச் சிந்துவதைத் தவிர, சிந்தப்பட்ட இரத்தத்துக்கு வேறெந்தப் பாவப் பரிகாரமும் இல்லை.+ 34 நீங்கள் வாழ்கிற தேசத்தைத் தீட்டுப்படுத்தக் கூடாது. ஏனென்றால், நான் அங்கே இருக்கிறேன். யெகோவாவாகிய நான் இஸ்ரவேலர்களின் நடுவில் இருக்கிறேன்’”+ என்றார்.

  • 2 நாளாகமம் 33:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 இஸ்ரவேலர்களின் கண் முன்னால் யெகோவா அழித்துப்போட்ட மற்ற தேசத்தார் செய்ததைவிட படுமோசமான காரியங்களைச் செய்ய யூதா மக்களையும் எருசலேம் மக்களையும் மனாசே தூண்டிக்கொண்டே இருந்தார். இப்படி, கடவுளைவிட்டு அவர்கள் வழிவிலகிப் போகும்படி செய்தார்.+

  • எரேமியா 3:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 “ஒரு கணவன் தன்னுடைய மனைவியை அனுப்பிவிட்ட பிறகு, அவள் போய் இன்னொருவனுடைய மனைவியாகிவிட்டால், அவளை மறுபடியும் சேர்த்துக்கொள்ள முடியுமா?” என்று ஜனங்கள் கேட்கிறார்கள்.

      தேசம் ஏற்கெனவே சீர்கெட்டுத் தறிகெட்டுக் கிடக்கிறது.+

      “நீ* நிறைய பேரோடு விபச்சாரம் செய்திருக்கிறாய்,+

      இப்போது மறுபடியும் என்னிடம் சேர்ந்துகொள்ள முடியுமா?” என்று யெகோவா கேட்கிறார்.

  • எரேமியா 23:10, 11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 கடவுளுக்குத் துரோகம் செய்கிறவர்கள்தான் தேசத்தில் நிறைந்திருக்கிறார்கள்.+

      சாபத்தினால் தேசமே சோகமாக இருக்கிறது.+

      வனாந்தரத்திலுள்ள மேய்ச்சல் நிலங்கள் காய்ந்துவிட்டன.+

      ஜனங்கள் படுமோசமான வழியில் போகிறார்கள்.

      அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.

      11 “தீர்க்கதரிசிகளும் சரி, குருமார்களும் சரி, துரோகம் செய்கிறார்கள்.*+

      என் வீட்டிலேயே அக்கிரமம் செய்கிறார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.

  • புலம்பல் 4:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 தீர்க்கதரிசிகளும் குருமார்களும் செய்த பாவங்களால்தான் இந்தக் கதி!+

      அவர்கள் நீதிமான்களின் இரத்தத்தை அங்கே சிந்தினார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்