உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 72:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 72 கடவுளே, ராஜாவுக்கு உங்களுடைய நீதித்தீர்ப்புகளைத் தெரிவியுங்கள்.

      ராஜாவின் மகனுக்கு உங்களுடைய நீதியை அருளுங்கள்.+

  • சங்கீதம் 72:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 ஒரு கடலிலிருந்து இன்னொரு கடல் வரைக்கும்,

      ஆறு* தொடங்கி பூமியின் எல்லைகள் வரைக்கும்

      அவருக்குக் குடிமக்கள் இருப்பார்கள்.+

  • சங்கீதம் 86:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 யெகோவாவே, நீங்கள் உருவாக்கிய எல்லா தேசங்களும்,

      உங்கள் முன்னால் வந்து தலைவணங்கும்.+

      உங்கள் பெயருக்கு மகிமை சேர்க்கும்.+

  • மீகா 4:1-3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 கடைசி நாட்களில் இப்படி நடக்கும்:

      யெகோவாவின் ஆலயம் இருக்கிற மலை+ எல்லா மலைகளுக்கும் மேலாக உறுதியாய் நிலைநிறுத்தப்படும்.

      எல்லா குன்றுகளுக்கும் மேலாக அது உயர்த்தப்படும்.

      பலதரப்பட்ட ஜனங்கள் அங்கு கூட்டம் கூட்டமாக வருவார்கள்.+

       2 பல தேசங்களிலிருந்து வருகிற ஜனங்கள் மற்றவர்களைப் பார்த்து,

      “வாருங்கள், நாம் யெகோவாவின் மலைக்குப் போகலாம்.

      யாக்கோபின் கடவுளுடைய ஆலயத்துக்குப் போகலாம்.+

      அவர் தன்னுடைய வழிகளை நமக்குக் கற்றுக்கொடுப்பார்.

      நாம் அவர் பாதைகளில் நடப்போம்” என்று சொல்வார்கள்.

      ஏனென்றால், சீயோனிலிருந்து சட்டமும்,*

      எருசலேமிலிருந்து யெகோவாவின் வார்த்தையும் புறப்படும்.

       3 பலதரப்பட்ட ஜனங்களுக்கு அவர் தீர்ப்பு கொடுப்பார்.+

      தூரத்தில் இருக்கிற பெரிய ஜனக்கூட்டங்களின் விவகாரங்களைச் சரிசெய்வார்.

      அவர்கள் தங்களுடைய வாள்களை மண்வெட்டிகளாக மாற்றுவார்கள்.

      ஈட்டிகளை அரிவாள்களாக அடிப்பார்கள்.+

      ஒரு ஜனத்துக்கு எதிராக இன்னொரு ஜனம் வாள் எடுக்காது.

      போர் செய்ய இனி யாரும் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.+

  • ஆகாய் 2:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 ‘எல்லா தேசங்களையும் நான் உலுக்குவேன். அப்போது, எல்லா தேசங்களின் செல்வங்களும்* இந்த ஆலயத்துக்குள் வந்து சேரும்.+ இந்த ஆலயத்தை நான் மகிமையால் நிரப்புவேன்’+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.

  • அப்போஸ்தலர் 10:34, 35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 அப்போது பேதுரு பேச ஆரம்பித்து, “கடவுள் பாரபட்சம் காட்டாதவர்+ என்பதையும், 35 அவருக்குப் பயந்து சரியானதைச் செய்கிறவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்+ என்பதையும் இப்போது நான் நன்றாகப் புரிந்துகொண்டேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்