உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 23:31-34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 யோவாகாஸ்+ ராஜாவானபோது அவருக்கு 23 வயது; அவர் எருசலேமில் மூன்று மாதங்கள் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் அமுத்தாள்;+ அவள் லிப்னாவைச் சேர்ந்த எரேமியாவின் மகள். 32 யோவாகாஸ் தன்னுடைய முன்னோர்களைப் போலவே யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்தார்.+ 33 காமாத் பகுதியிலிருந்த ரிப்லாவில் பார்வோன் நேகோ+ அவரைச் சிறையில் அடைத்தான்;+ எருசலேமில் அவருடைய ஆட்சிக்கு முடிவுகட்டினான். பின்பு, 100 தாலந்து* வெள்ளியையும் ஒரு தாலந்து தங்கத்தையும் தரச்சொல்லி, அவருடைய தேசத்துக்கு அபராதம் விதித்தான்.+ 34 அதோடு, யோசியாவின் இடத்தில் அவருடைய மகன் எலியாக்கீமை ராஜாவாக நியமித்தான்; எலியாக்கீமின் பெயரை யோயாக்கீம் என்று மாற்றினான். ஆனால், யோவாகாசை எகிப்துக்குக் கொண்டுபோனான்;+ கடைசியில், யோவாகாஸ் அங்கே இறந்துபோனார்.+

  • 2 நாளாகமம் 36:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 அதோடு, யோவாகாசின் சகோதரன் எலியாக்கீமை யூதாவுக்கும் எருசலேமுக்கும் ராஜாவாக நியமித்தான்; அவருடைய பெயரை யோயாக்கீம் என்று மாற்றினான். ஆனால், அவருடைய சகோதரன் யோவாகாசை நேகோ+ எகிப்துக்குக் கொண்டுபோனான்.+

  • எரேமியா 22:11, 12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 யோசியாவின் மகனும் யோசியாவுக்கு+ அடுத்ததாக யூதாவை ஆட்சி செய்த ராஜாவுமான சல்லூம்*+ இங்கிருந்து சிறைபிடிக்கப்பட்டுப் போனார். அவரைப் பற்றி யெகோவா சொல்வது இதுதான்: ‘அவன் இங்கே திரும்பி வர மாட்டான். 12 சிறைபிடிக்கப்பட்டுப் போன தேசத்திலேயே செத்துப்போவான். இனி இந்தத் தேசத்தைப் பார்க்கவே மாட்டான்.’+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்