உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 30:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 தரிசனம் பார்க்கிறவர்களிடம், ‘தரிசனங்களைப் பார்க்காதீர்கள்’ என்று அவர்கள் சொல்கிறார்கள்.

      தீர்க்கதரிசனம் சொல்கிறவர்களிடம், ‘நீங்கள் பார்க்கிற நிஜமான தரிசனங்களைச் சொல்லாதீர்கள்.+

      எங்கள் காதுக்கு இனிமையானதைச் சொல்லுங்கள்; நீங்களாகவே கற்பனை செய்து சொல்லுங்கள்.+

  • எரேமியா 23:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 “என் பெயரில் பொய்த் தீர்க்கதரிசனம் சொல்கிறவர்கள், ‘எனக்கு ஒரு கனவு வந்தது! எனக்கு ஒரு கனவு வந்தது!’+ என்று சொல்வதைக் கேட்டேன்.

  • புலம்பல் 2:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 உன்னுடைய தீர்க்கதரிசிகள் பார்த்த தரிசனங்கள் பொய்யானவை, அர்த்தமற்றவை.+

      அவர்கள் உன்னுடைய குற்றத்தைச் சுட்டிக்காட்டவில்லை; நீ சிறைபிடிக்கப்பட்டுப் போவதைத் தடுக்கவில்லை.+

      பொய்த் தரிசனங்களைச் சொல்லிச் சொல்லியே உன்னை ஏமாற்றினார்கள்.+

  • எசேக்கியேல் 13:9, 10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 போலித் தரிசனங்களைப் பார்த்துப் பொய்த் தீர்க்கதரிசனங்களைச் சொல்கிற தீர்க்கதரிசிகளை நான் தண்டிப்பேன்.+ எனக்குப் பிரியமான ஜனங்களோடு அவர்கள் இருக்க மாட்டார்கள். இஸ்ரவேல் ஜனங்களுடைய பதிவேட்டில் அவர்களுடைய பெயர் இருக்காது. அவர்கள் இஸ்ரவேல் தேசத்துக்குத் திரும்பிவர மாட்டார்கள். அப்போது, நான்தான் உன்னதப் பேரரசராகிய யெகோவா என்று நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.+ 10 சமாதானம் இல்லாதபோதும் “சமாதானம் இருக்கிறது” என்று சொல்லி என் ஜனங்களை அவர்கள் ஏமாற்றியதால்தான் அவர்களுக்கு இந்தக் கதி ஏற்படும்.+ அவர்கள் உறுதியில்லாத தடுப்புச்சுவரைக் கட்டி, அதற்கு மேற்பூச்சாக வெள்ளையடிக்கிறார்கள்.’*+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்