-
எரேமியா 27:6, 7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 இப்போது என் ஊழியனும் பாபிலோன் ராஜாவுமான நேபுகாத்நேச்சாரின் கையில் எல்லா தேசங்களையும் கொடுத்திருக்கிறேன்.+ காட்டு மிருகங்களைக்கூட அவனுக்கு அடிபணிய வைத்திருக்கிறேன். 7 எல்லா தேசத்தாரும் அவனுக்கும் அவனுடைய பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் பணிவிடை செய்வார்கள். ஆனால், பிற்பாடு அவனுடைய தேசமே கைப்பற்றப்படும்.+ பல தேசத்தாரும் பெரிய பெரிய ராஜாக்களும் அவனை அடிமைப்படுத்துவார்கள்.’+
-
-
எரேமியா 50:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
50 கல்தேயர்களின் தேசமான பாபிலோனைப்+ பற்றி எரேமியா தீர்க்கதரிசியின் மூலம் யெகோவா சொன்னது இதுதான்:
2 “இதை எல்லா தேசங்களிலும் சொல்லுங்கள்!
கொடியை* ஏற்றி, அறிவிப்பு செய்யுங்கள்!
எதையும் மறைக்காதீர்கள்!
இப்படிச் சொல்லுங்கள்: ‘பாபிலோன் கைப்பற்றப்பட்டது!+
பேல் அவமானம் அடைந்துவிட்டது!+
மெரொதாக்கைத் திகில் கவ்விக்கொண்டது!
பாபிலோனின் சிலைகளுக்கு அவமானம் வந்துவிட்டது!
அவளுடைய அருவருப்பான* உருவச்சிலைகள் மிரண்டுபோய்விட்டன!’
-