உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 18:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 பின்பு யெகோவா ஆரோனிடம், “இஸ்ரவேல் தேசத்தில் உனக்கு எந்தச் சொத்தும் இருக்காது, அவர்களுடைய நிலத்தில் எதுவும் உனக்குச் சொந்தமாகாது.+ இஸ்ரவேலர்களின் நடுவில் நானே உன் சொத்து.+

  • எண்ணாகமம் 18:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 யெகோவாவாகிய எனக்கு பத்திலொரு பாகமாக இஸ்ரவேலர்கள் கொடுக்கிற காணிக்கைகள் எல்லாவற்றையுமே நான் லேவியர்களுக்குச் சொத்தாகக் கொடுத்திருக்கிறேன். அதனால்தான், ‘இஸ்ரவேலர்களின் நடுவில் அவர்களுக்கு எந்தச் சொத்தும் இருக்கக் கூடாது’ என்று அவர்களிடம் சொன்னேன்”+ என்றார்.

  • உபாகமம் 10:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அதனால்தான், லேவியர்களுக்கு அவர்களுடைய சகோதரர்களோடு எந்தப் பங்கும் சொத்தும் கொடுக்கப்படவில்லை. உங்கள் கடவுளாகிய யெகோவா சொன்னபடி, யெகோவாதான் அவர்களுடைய சொத்து.+

  • உபாகமம் 14:28, 29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 ஒவ்வொரு மூன்றாம் வருஷத்தின் முடிவிலும், அந்த வருஷத்தில் விளைந்தவற்றில் பத்திலொரு பாகத்தைக் கொண்டுவந்து, உங்கள் நகரங்களில் வைக்க வேண்டும்.+ 29 அப்போது, உங்களோடு எந்தப் பங்கும் சொத்தும் கொடுக்கப்படாத லேவியனும், உங்கள் நகரங்களில் வாழ்கிற மற்ற தேசத்துக்காரனும், அப்பா இல்லாத பிள்ளையும்,* விதவையும் வந்து அவற்றை எடுத்து, திருப்தியாகச் சாப்பிடுவார்கள்.+ உங்கள் கடவுளாகிய யெகோவாவும் நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார்”+ என்றார்.

  • யோசுவா 13:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 லேவி கோத்திரத்தாருக்கு மட்டும் தேசம் சொத்தாகப் பங்குபோட்டுக் கொடுக்கப்படவில்லை.+ இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா வாக்குறுதி தந்தபடியே,+ அவருக்குச் செலுத்தப்பட்ட தகன பலிகள்தான் லேவியர்களுக்குக் கிடைத்த சொத்தாக இருந்தன.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்