உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 49:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 ஷைலோ* வரும்வரை+ யூதாவைவிட்டு செங்கோல் விலகாது,+ அவன் பாதங்களுக்கு இடையிலிருந்து அதிகாரக்கோலும் விலகாது. ஜனங்கள் எல்லாரும் ஷைலோவுக்குக் கீழ்ப்படிவார்கள்.+

  • 1 ராஜாக்கள் 8:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 கொடுத்த வாக்கை யெகோவா நிறைவேற்றிவிட்டார். யெகோவா வாக்குக் கொடுத்தபடியே, என் அப்பா தாவீதுக்குப் பிறகு இஸ்ரவேலின் சிம்மாசனத்தில் நான் ராஜாவாக உட்கார்ந்திருக்கிறேன். அதோடு, இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவின் பெயருக்காக ஒரு ஆலயத்தையும் கட்டி முடித்திருக்கிறேன்.+

  • 1 நாளாகமம் 17:11-14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 நீ இறந்து உன் முன்னோர்களைப் போல் நல்லடக்கம் செய்யப்பட்ட பின்பு, உன் சந்ததியை, உன் மகன்களில் ஒருவனை,+ ராஜாவாக ஏற்படுத்துவேன். அவனுடைய ஆட்சியை உறுதியாக நிலைநாட்டுவேன்.+ 12 அவன்தான் எனக்காக ஒரு ஆலயத்தைக் கட்டுவான்.+ அவனுடைய சிம்மாசனத்தை என்றென்றும் நிலைக்க வைப்பேன்.+ 13 நான் அவனுக்குத் தகப்பனாக இருப்பேன், அவன் எனக்கு மகனாக இருப்பான்.+ உனக்கு முன்பு இருந்தவனுக்கு+ மாறாத அன்பு காட்டுவதை நிறுத்திக்கொண்டது போல அவனுக்குச் செய்ய மாட்டேன்.+ 14 அவனை என் சிம்மாசனத்தில் உட்கார வைத்து என்றென்றும் ஆட்சி செய்ய வைப்பேன்.+ அவனுடைய ஆட்சியையும் ராஜ வம்சத்தையும் என்றென்றும் நிலைக்கச் செய்வேன்”+ என்று சொல்’” என்றார்.

  • சங்கீதம் 132:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 தாவீதுக்குக் கொடுத்த வாக்கை யெகோவா கண்டிப்பாக மீற மாட்டார்.

      அவர் தாவீதிடம், “உன்னுடைய சந்ததியில் வரும் ஒருவரை

      உன் சிம்மாசனத்தில் உட்கார வைப்பேன்.+

  • ஏசாயா 9:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 அவருடைய ஆட்சியின் வளர்ச்சிக்கும்

      சமாதானத்துக்கும் முடிவே இருக்காது.+

      அவர் தாவீதின் சிம்மாசனத்தில் உட்காருவார்.+

      அதுமுதல் என்றென்றும்,

      நியாயத்தோடும்+ நீதியோடும்+ ஆட்சி செய்து,

      அதை* உறுதியாக நிலைநாட்டுவார்.+

      பரலோகப் படைகளின் யெகோவாவுடைய வைராக்கியம் இதைச் செய்யும்.

  • ஏசாயா 11:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 ஈசாய்+ என்ற அடிமரத்திலிருந்து ஒரு துளிர்+ துளிர்க்கும்.

      அதன் வேர்களிலிருந்து ஒரு தளிர்+ முளைத்து கனி தரும்.

  • மத்தேயு 21:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அவருக்கு முன்னும் பின்னும் போய்க்கொண்டிருந்த கூட்டத்தார், “கடவுளே, தாவீதின் மகனைக் காத்தருளுங்கள்!*+ யெகோவாவின்* பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!+ பரலோகத்தில் இருக்கிறவரே, இவரைக் காத்தருளுங்கள்!”+ என்று ஆரவாரம் செய்துகொண்டே இருந்தார்கள்.

  • மத்தேயு 22:42
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 42 “நீங்கள் கிறிஸ்துவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய மகன்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “தாவீதின் மகன்”+ என்று சொன்னார்கள்.

  • லூக்கா 1:32, 33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 அவர் உயர்ந்தவராக இருப்பார்;+ உன்னதமான கடவுளின் மகன் என்று அழைக்கப்படுவார்;+ அவருடைய தந்தையான தாவீதின் சிம்மாசனத்தைக் கடவுளாகிய யெகோவா* அவருக்குக் கொடுப்பார்.+ 33 அவர் ராஜாவாக யாக்கோபுடைய வம்சத்தை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய ஆட்சிக்கு முடிவே இருக்காது”+ என்று சொன்னார்.

  • யோவான் 7:42
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 42 அவர் தாவீதின் வம்சத்தில்,+ தாவீது குடியிருந்த+ பெத்லகேம்+ கிராமத்திலிருந்துதான் வருவாரென வேதவசனம் சொல்கிறது, இல்லையா?” என்றார்கள்.

  • அப்போஸ்தலர் 2:30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்ததாலும், கடவுள் அவரிடம், ‘உன்னுடைய சந்ததியில் வரும் ஒருவரை உன் சிம்மாசனத்தில் உட்கார வைப்பேன்’+ என்று ஆணையிட்டுக் கொடுத்ததை அறிந்திருந்ததாலும்,

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்