-
ஏசாயா 37:14-20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 அசீரிய ராஜா அனுப்பிய கடிதங்களைத் தூதுவர்களிடமிருந்து எசேக்கியா வாங்கிப் படித்தார். பின்பு, யெகோவாவின் ஆலயத்துக்குப் போய் அவற்றை* யெகோவாவின் முன்னால் விரித்து வைத்து,+ 15 யெகோவாவிடம் ஜெபம் செய்து,+ 16 “பரலோகப் படைகளின் யெகோவாவே,+ இஸ்ரவேலின் தேவனே, கேருபீன்களுக்கு மேலே* வீற்றிருப்பவரே, நீங்கள் ஒருவர்தான் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களுக்கும் கடவுள். நீங்கள்தான் வானத்தையும் பூமியையும் படைத்த உண்மைக் கடவுள். 17 யெகோவாவே, தயவுசெய்து காதுகொடுத்துக் கேளுங்கள்!+ யெகோவாவே, உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள்!+ உயிருள்ள கடவுளாகிய உங்களைப் பழித்து சனகெரிப் என்னவெல்லாம் எழுதி அனுப்பியிருக்கிறான் என்று பாருங்கள்.+ 18 யெகோவாவே, அசீரிய ராஜாக்கள் எல்லா தேசங்களையும் அழித்துப்போட்டது உண்மைதான்,+ அவர்களுடைய சொந்த தேசத்தையும்கூட அவர்கள் அழித்துப்போட்டார்கள். 19 அங்கிருந்த ஜனங்கள் வணங்கிய தெய்வங்களையும் நெருப்பில் எரித்துப்போட்டார்கள்.+ அவையெல்லாம் கடவுள் கிடையாதே, மனுஷர்கள் செய்தவைதானே,+ வெறும் மரக்கட்டையும் கல்லும்தானே. அதனால்தான் அவர்களால் அவற்றை அழிக்க முடிந்தது. 20 ஆனால் யெகோவாவே, எங்கள் கடவுளே, நீங்கள் மட்டும்தான் கடவுள்+ என்பதைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களும் புரிந்துகொள்ள வேண்டும். அதனால் யெகோவாவே, எதிரியின் கையிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று சொன்னார்.
-