-
உபாகமம் 30:1-3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
30 பின்பு அவர், “நான் உங்கள் முன்னால் வைத்த ஆசீர்வாதங்களும் சாபங்களும் நிறைவேறும்போது,+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைச் சிதறிப்போக வைக்கும் தேசங்களில்+ அவற்றை நினைத்துப் பார்த்து,+ 2 உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் ஒருவேளை நீங்கள் திரும்பி வரலாம்.+ ஒருவேளை நீங்களும் உங்கள் மகன்களும் இன்று நான் கொடுக்கிற எல்லா கட்டளைகளையும் கேட்டு, முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால்,+ 3 சிறைபிடிக்கப்பட்டிருந்த உங்களை உங்கள் கடவுளாகிய யெகோவா விடுதலை செய்வார்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள்மேல் இரக்கம் காட்டுவார்.+ உங்களைச் சிதறிப்போக வைத்த தேசங்களிலிருந்து மறுபடியும் உங்களைக் கூட்டிச்சேர்ப்பார்.+
-
-
ஏசாயா 66:20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 பின்பு, எல்லா தேசங்களிலும் உள்ள உங்கள் சகோதரர்களை என் பரிசுத்த மலையாகிய எருசலேமுக்குக் குதிரைகளிலும், ரதங்களிலும், கூண்டு வண்டிகளிலும், கோவேறு கழுதைகளிலும்,* வேகமாக ஓடும் ஒட்டகங்களிலும் கூட்டிக்கொண்டு வருவார்கள்.+ இஸ்ரவேல் மக்கள் சுத்தமான பாத்திரத்தில் தங்கள் காணிக்கைகளை யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவருவது போல அவர்கள் உங்கள் சகோதரர்களை யெகோவாவுக்கு அன்பளிப்பாகக் கொண்டுவருவார்கள்” என்று யெகோவா சொல்கிறார்.
-