உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 25:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 மரணத்தை அவர் அடியோடு ஒழித்துக்கட்டுவார்.+

      உன்னதப் பேரரசராகிய யெகோவா எல்லாருடைய முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார்.+

      தன்னுடைய ஜனங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை இந்த உலகத்திலிருந்தே நீக்கிவிடுவார்.

      யெகோவாவே இதைச் சொல்லியிருக்கிறார்.

  • ஓசியா 13:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 கல்லறையின் பிடியிலிருந்து அவனை விடுவிப்பேன்.

      சாவிலிருந்து அவனை மீட்பேன்.+

      மரணமே, உன் கொடுக்குகள் எங்கே?+

      கல்லறையே, உன் நாச வேலைகள் எங்கே?+

      ஆனாலும், நான் கரிசனை காட்ட மாட்டேன்.

  • மாற்கு 12:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுவதைப் பற்றி மோசேயின் புத்தகத்தில் இருக்கிற முட்புதரைப் பற்றிய பதிவில் நீங்கள் வாசித்ததில்லையா? கடவுள் அவரிடம், ‘நான் ஆபிரகாமின் கடவுளாகவும், ஈசாக்கின் கடவுளாகவும், யாக்கோபின் கடவுளாகவும் இருக்கிறேன்’+ என்று சொன்னார், இல்லையா?

  • யோவான் 5:28, 29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 இதைப் பற்றி ஆச்சரியப்படாதீர்கள்; ஏனென்றால், நேரம் வருகிறது; அப்போது, நினைவுக் கல்லறைகளில்* இருக்கிற எல்லாரும் அவருடைய குரலைக் கேட்டு வெளியே வருவார்கள்.+ 29 நல்லது செய்தவர்கள் வாழ்வு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள், கெட்டதைச் செய்துவந்தவர்கள் நியாயத்தீர்ப்பு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள்.+

  • யோவான் 11:24, 25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 அதற்கு மார்த்தாள், “கடைசி நாளில் உயிர்த்தெழுதல்+ நடக்கும்போது அவன் உயிரோடு வருவான் என்று எனக்குத் தெரியும்” என்று சொன்னாள். 25 அப்போது இயேசு, “நானே உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருக்கிறேன்.+ என்மேல் விசுவாசம் வைக்கிறவன் இறந்தாலும் உயிர்பெறுவான்.

  • அப்போஸ்தலர் 24:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அதோடு, நீதிமான்களும் அநீதிமான்களும்+ உயிரோடு எழுப்பப்படுவார்கள்+ என்று கடவுளிடம் இவர்கள் நம்பிக்கை வைத்திருப்பது போலவே நானும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

  • 1 கொரிந்தியர் 15:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 ஒரே மனிதனால் மரணம் வந்தது,+ அதேபோல் ஒரே மனிதனால் உயிர்த்தெழுதலும் வருகிறது.+

  • 1 தெசலோனிக்கேயர் 4:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 இயேசு இறந்து உயிரோடு எழுந்தார்+ என்ற விசுவாசம் நமக்கு இருக்கிறது. அப்படியானால், இயேசுவின் சீஷர்களாக இறந்தவர்களையும்* அவரோடு இருப்பதற்காகக் கடவுள் உயிரோடு எழுப்புவார்.+

  • வெளிப்படுத்துதல் 20:12, 13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 இறந்துபோன பெரியவர்களும் சிறியவர்களும் சிம்மாசனத்துக்கு முன்னால் நிற்பதைப் பார்த்தேன். அப்போது சுருள்கள் திறக்கப்பட்டன. வாழ்வின் சுருள்+ என்ற வேறொரு சுருளும் திறக்கப்பட்டது. அந்தச் சுருள்களில் எழுதப்பட்டிருக்கிறபடியே, இறந்தவர்கள் தங்களுடைய செயல்களுக்கு ஏற்ப தீர்ப்பு பெற்றார்கள்.+ 13 கடல் தன்னிடம் இருக்கிற இறந்தவர்களை ஒப்படைத்தது; அதேபோல், மரணமும் கல்லறையும்* தங்களிடம் இருக்கிற இறந்தவர்களை ஒப்படைத்தன. ஒவ்வொருவரும் தங்களுடைய செயல்களுக்கு ஏற்ப தீர்ப்பு பெற்றார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்