உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 2:2, 3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 கடைசி நாட்களில் இப்படி நடக்கும்:

      யெகோவாவின் ஆலயம் இருக்கிற மலை எல்லா மலைகளுக்கும் மேலாக உறுதியாய் நிலைநிறுத்தப்படும்.+

      எல்லா குன்றுகளுக்கும் மேலாக அது உயர்த்தப்படும்.

      எல்லா தேசத்து ஜனங்களும் அங்கு கூட்டம் கூட்டமாக வருவார்கள்.+

       3 அங்கே வருகிற பலதரப்பட்ட ஜனங்கள் மற்றவர்களைப் பார்த்து,

      “வாருங்கள், நாம் யெகோவாவின் மலைக்குப் போகலாம்.

      யாக்கோபின் கடவுளுடைய ஆலயத்துக்குப் போகலாம்.+

      அவர் தன்னுடைய வழிகளை நமக்குக் கற்றுக்கொடுப்பார்.

      நாம் அவர் பாதைகளில் நடப்போம்” என்று சொல்வார்கள்.+

      ஏனென்றால், சீயோனிலிருந்து சட்டமும்,*

      எருசலேமிலிருந்து யெகோவாவின் வார்த்தையும் புறப்படும்.+

  • ஏசாயா 56:6, 7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 என் ஜனங்களோடு சேர்ந்துகொள்ள வருகிற மற்ற தேசத்து ஜனங்களையும் நான் ஏற்றுக்கொள்வேன்.

      யெகோவாவுக்குச் சேவை செய்யவும், யெகோவாவின் பெயரை நேசிக்கவும்,+

      அவருடைய ஊழியர்களாக இருக்கவும் அவர்கள் வருவார்கள்.

      அவர்கள் என்னுடைய ஓய்வுநாளின் புனிதத்தைக் கெடுக்காமல் அதை அனுசரிப்பார்கள்.

      என்னுடைய ஒப்பந்தத்தின்படி நடப்பார்கள்.

       7 அவர்களையும் என்னுடைய பரிசுத்த மலைக்குக் கூட்டிக்கொண்டு வருவேன்.+

      என்னுடைய ஜெப வீட்டில் அவர்களைச் சந்தோஷமாக இருக்க வைப்பேன்.

      என்னுடைய பலிபீடத்தில் அவர்கள் செலுத்துகிற தகன பலிகளையும் காணிக்கைகளையும் ஏற்றுக்கொள்வேன்.

      ஏனென்றால், என் வீடு எல்லா ஜனங்களுக்குமான ஜெப வீடு என்று அழைக்கப்படும்.”+

  • ஏசாயா 60:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 தேசங்கள் உன்னுடைய வெளிச்சத்திடம் வரும்.+

      ராஜாக்கள்+ உன்னுடைய பிரகாசமான ஒளியிடம் வருவார்கள்.+

  • மீகா 4:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 கடைசி நாட்களில் இப்படி நடக்கும்:

      யெகோவாவின் ஆலயம் இருக்கிற மலை+ எல்லா மலைகளுக்கும் மேலாக உறுதியாய் நிலைநிறுத்தப்படும்.

      எல்லா குன்றுகளுக்கும் மேலாக அது உயர்த்தப்படும்.

      பலதரப்பட்ட ஜனங்கள் அங்கு கூட்டம் கூட்டமாக வருவார்கள்.+

       2 பல தேசங்களிலிருந்து வருகிற ஜனங்கள் மற்றவர்களைப் பார்த்து,

      “வாருங்கள், நாம் யெகோவாவின் மலைக்குப் போகலாம்.

      யாக்கோபின் கடவுளுடைய ஆலயத்துக்குப் போகலாம்.+

      அவர் தன்னுடைய வழிகளை நமக்குக் கற்றுக்கொடுப்பார்.

      நாம் அவர் பாதைகளில் நடப்போம்” என்று சொல்வார்கள்.

      ஏனென்றால், சீயோனிலிருந்து சட்டமும்,*

      எருசலேமிலிருந்து யெகோவாவின் வார்த்தையும் புறப்படும்.

  • சகரியா 2:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 “அந்த நாளில் பல தேசத்து ஜனங்கள் யெகோவாவாகிய என்னிடம் வருவார்கள்;+ அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள். சீயோன் ஜனங்களே, நான் உங்களோடு குடியிருப்பேன்” என்றும் அவர் சொல்கிறார். பரலோகப் படைகளின் யெகோவாதான் உங்களிடம் என்னை அனுப்பினார் என்பதை அப்போது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

  • சகரியா 8:22, 23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 பல இனங்களையும் பலம்படைத்த தேசங்களையும் சேர்ந்தவர்கள், பரலோகப் படைகளின் யெகோவாவைத் தேடவும் யெகோவாவிடம் கருணை கேட்டுக் கெஞ்சவும் எருசலேமுக்கு வருவார்கள்.’+

      23 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘அந்த நாட்களில், மற்ற தேசங்களைச் சேர்ந்த எல்லா பாஷைக்காரர்களிலும் பத்துப் பேர்+ ஒரு யூதனுடைய உடையை* இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, “கடவுள் உங்களோடு இருப்பதாகக் கேள்விப்பட்டோம்.+ அதனால், நாங்களும் உங்களோடு வருகிறோம்”+ என்று சொல்வார்கள்.’”

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்