-
2 நாளாகமம் 36:17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 எனவே, கல்தேயர்களின் ராஜாவை அவர்களுக்கு விரோதமாக அனுப்பினார்.+ அவர்களுடைய ஆலயத்திலேயே+ இளைஞர்களை அவன் வாளால் வெட்டிக் கொன்றான்.+ இளைஞர்கள் என்றோ கன்னிப்பெண்கள் என்றோ பார்க்கவில்லை, வயதானவர்கள் என்றோ பலவீனமானவர்கள் என்றோ பரிதாபப்படவில்லை.+ சொல்லப்போனால், எல்லாவற்றையும் கடவுள் அவர்கள் கையில் கொடுத்துவிட்டார்.+
-
-
எரேமியா 17:27பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
27 ஆனால், நீங்கள் என் பேச்சைக் கேட்காமல் ஓய்வுநாளின் புனிதத்தைக் கெடுத்தீர்கள் என்றால், ஓய்வுநாளின்போது சரக்குகளைச் சுமந்துகொண்டும் எருசலேமின் நுழைவாசல்கள் வழியாக அவற்றை எடுத்துக்கொண்டும் வந்தீர்கள் என்றால், அந்த நுழைவாசல்களில் தீ வைப்பேன். அந்தத் தீ அணையாமல் எரிந்துகொண்டே இருக்கும். அது எருசலேமின் கோட்டைகளைச்+ சாம்பலாக்கிவிடும்”’+ என்று சொன்னார்.”
-