உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 2:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 ‘யெகோவா எங்கே?’ என்று குருமார்கள் கேட்கவில்லை.+

      திருச்சட்டத்தைக் கற்றுத்தருகிறவர்களுக்கு என்னைத் தெரியவில்லை.

      மேய்ப்பர்கள் என் பேச்சை மீறினார்கள்.+

      தீர்க்கதரிசிகள் பாகாலின் பெயரில் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.+

      ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களைத் தேடிப்போனார்கள்.

  • எரேமியா 8:10-12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 நான் அவர்களுடைய மனைவிகளையும் நிலங்களையும்

      மற்ற ஆட்களின் கையில் கொடுத்துவிடுவேன்.+

      சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லாருமே அநியாயமாக லாபம் சம்பாதிக்கிறார்கள்.+

      தீர்க்கதரிசிகள்முதல் குருமார்கள்வரை எல்லாருமே மோசடி செய்கிறார்கள்.+

      11 சமாதானமே இல்லாதபோது,

      “சமாதானம் இருக்கிறது! சமாதானம் இருக்கிறது!” என்று சொல்லி,+

      என் ஜனங்களுடைய காயங்களை* மேலோட்டமாகக் குணப்படுத்தப் பார்க்கிறார்கள்.

      12 அவர்கள் செய்த அருவருப்பான காரியங்களை நினைத்துக் கொஞ்சமாவது வெட்கப்படுகிறார்களா?

      இல்லவே இல்லை!

      வெட்கம் என்றால் என்னவென்றுகூட அவர்களுக்குத் தெரியாது!+

      அதனால், விழுந்துவிட்டவர்களோடு அவர்களும் விழுவார்கள்.

      நான் தண்டிக்கும்போது அவர்கள் தடுக்கி விழுவார்கள்’+ என்று யெகோவா சொல்கிறார்.

  • எரேமியா 23:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 “தீர்க்கதரிசிகளும் சரி, குருமார்களும் சரி, துரோகம் செய்கிறார்கள்.*+

      என் வீட்டிலேயே அக்கிரமம் செய்கிறார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.

  • மீகா 3:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 தீர்க்கதரிசிகள் யெகோவாவின் ஜனங்களைக் கெட்ட வழிக்குக் கொண்டுபோகிறார்கள்.+

      யாராவது சாப்பாடு கொடுக்கும்போது,*+ ‘நன்றாக இருப்பீர்கள்!’ என்று வாழ்த்துகிறார்கள்.+

      ஆனால் யாராவது சாப்பாடு கொடுக்காதபோது, ‘நாசமாய்ப் போவீர்கள்!’ என்று சபிக்கிறார்கள்.

  • மீகா 3:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 எருசலேமின் தலைவர்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு சொல்கிறார்கள்.+

      அவளுடைய குருமார்கள் பணத்துக்காகப் போதிக்கிறார்கள்.+

      அவளுடைய தீர்க்கதரிசிகள் காசுக்காக* குறிசொல்கிறார்கள்.+

      ஆனாலும், யெகோவாமேல் நம்பிக்கை இருப்பதுபோல் காட்டிக்கொள்கிறார்கள்.

      “யெகோவா எங்களோடு இருக்கிறார்,+

      எங்களுக்கு எந்த ஆபத்தும் வராது”+ என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

  • செப்பனியா 3:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 உன் தீர்க்கதரிசிகள் திமிர் பிடித்தவர்கள், துரோகிகள்.+

      உன் குருமார்கள் பரிசுத்தமானதைக் கெடுப்பவர்கள்;+

      சட்டத்தை மீறுகிறவர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்