உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 18:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 எசேக்கியா ராஜா ஆட்சி செய்த 14-ஆம் வருஷத்தில், யூதாவிலிருந்த மதில் சூழ்ந்த நகரங்கள் எல்லாவற்றின் மேலும் அசீரிய ராஜா+ சனகெரிப் படையெடுத்து வந்து அவற்றைக் கைப்பற்றினான்.+

  • 2 நாளாகமம் 32:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 எசேக்கியா இவை எல்லாவற்றையும் உண்மையுடன் செய்து முடித்தார்.+ அதன் பின்பு, யூதா தேசத்தின் மீது அசீரிய ராஜா சனகெரிப் படையெடுத்து வந்து மதில் சூழ்ந்த நகரங்களை முற்றுகையிட்டான், மதில்களை உடைத்து அவற்றைக் கைப்பற்ற வேண்டும் என்று குறியாக இருந்தான்.+

  • ஏசாயா 8:7, 8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 அதனால், இவர்களுக்கு எதிராக அசீரிய ராஜா படைபலத்தோடு வருவான்.+

      யெகோவாதான் அவனை வரச் செய்வார்.

      வேகமாகப் பாய்ந்து வரும் ஆற்றை* போல அவன் வருவான்.

      அதன் எல்லா சிற்றாறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுக்கும்.

      அது எல்லா கரைகளிலும் புரண்டோடும்.

       8 அது யூதாவுக்குள் காட்டாறாய்ப் பாயும்.

      அதன் கழுத்துவரை எட்டும்,+ அதை வெள்ளக்காடாக்கும்.

      இம்மானுவேலே,*+

      அவன் தன்னுடைய சிறகுகளை விரித்து உன் தேசம் முழுவதையும் மூடுவான்” என்று சொன்னார்.

  • ஏசாயா 10:28-32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 அவன் ஆயாத் நகரத்துக்கு+ வந்திருக்கிறான்.

      மிக்ரோனைக் கடந்துவிட்டான்.

      மிக்மாஷில்+ தன்னுடைய பொருள்களை வைத்திருக்கிறான்.

      29 அவன் ஆற்றுத்துறையை* தாண்டிவிட்டான்.

      ராத்திரியிலே கெபாவில்+ தங்குகிறான்.

      ராமாவிலுள்ள ஜனங்கள் பயந்து நடுங்குகிறார்கள்,

      சவுலின் ஊரான கிபியாவிலுள்ள+ மக்கள் ஓடிவிட்டார்கள்.+

      30 காலீம் மக்களே, சத்தமாக அலறுங்கள்!

      லாயீஷ் மக்களே, கவனியுங்கள்!

      ஆனதோத்+ மக்களே, நீங்களும் கவனியுங்கள்!

      31 மத்மேனாவின் மக்கள் ஓட்டம் பிடித்தார்கள்.

      கேபிம் குடிமக்கள் பாதுகாப்பைத் தேடிப்போனார்கள்.

      32 அவன் இன்று நோபு நகரத்தில்+ தங்குவான்.

      அவன் சீயோன் மகளுடைய மலையையும்,

      எருசலேம் குன்றையும் பார்த்துக் கை நீட்டி மிரட்டுகிறான்.

  • ஏசாயா 33:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 நெடுஞ்சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

      வீதிகளில் யாரும் பயணம் செய்வதில்லை.

      அவன்* ஒப்பந்தத்தை மீறினான்.

      நகரங்கள்மேல் வெறுப்பைக் காட்டினான்.

      மனிதனை அவன் கொஞ்சமும் மதிப்பது இல்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்