உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 26:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 உங்கள் உணவுப் பொருள்களை அழித்துப்போடுவேன்.*+ அப்போது, 10 பெண்கள் ஒரே அடுப்பில் ரொட்டி சுடுவார்கள். அதையும் அளந்து அளந்துதான் கொடுப்பார்கள்.+ நீங்கள் சாப்பிட்டாலும் உங்கள் பசி தீராது.+

  • உபாகமம் 28:53
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 53 அப்போது நிலைமை படுமோசமாக இருக்கும். எதிரிகள் உங்களை வாட்டி வதைப்பார்கள். பெற்றெடுத்த பிள்ளைகளையே நீங்கள் சாப்பிடுவீர்கள். உங்கள் கடவுளாகிய யெகோவா தந்த மகன்களின் சதையையும் மகள்களின் சதையையும் தின்பீர்கள்.+

  • எரேமியா 37:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 அதனால், எரேமியாவை ‘காவலர் முற்றத்தில்’+ அடைத்து வைக்கும்படி சிதேக்கியா ராஜா கட்டளை கொடுத்தார். நகரத்தில் ரொட்டி கிடைக்கும்வரை+ ரொட்டி சுடுகிறவர்களின் தெருவிலிருந்து+ தினமும் எரேமியாவுக்கு ஒரு வட்டமான ரொட்டி கொடுக்கப்பட்டது. அவர் ‘காவலர் முற்றத்திலேயே’ வைக்கப்பட்டிருந்தார்.

  • எரேமியா 38:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அதாவது, ஜனங்களிடம் எரேமியா, “யெகோவா சொல்வது இதுதான்: ‘கல்தேயர்களிடம் சரணடைகிறவர்கள் உயிர் பிழைத்துக்கொள்வார்கள்.+ ஆனால், இந்த நகரத்திலேயே இருக்கிற எல்லாரும் வாளினாலும் பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும்+ சாவார்கள்.’

  • புலம்பல் 4:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 பால் குடிக்கும் குழந்தையின் நாக்கு வறண்டுபோய் மேல்வாயோடு ஒட்டிக்கொள்கிறது.

      பிள்ளைகள் உணவுக்காகக் கெஞ்சுகிறார்கள்,+ ஆனால் யாரும் எதுவும் கொடுப்பதில்லை.+

  • எசேக்கியேல் 4:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 பின்பு, “மனிதகுமாரனே, எருசலேமில் நான் பஞ்சத்தைக் கொண்டுவரப்போகிறேன்.*+ ஜனங்கள் பயங்கர கவலையோடு உணவை அளந்து அளந்து சாப்பிடுவார்கள்.+ திகிலோடு தண்ணீரை அளந்து அளந்து குடிப்பார்கள்.+

  • எசேக்கியேல் 5:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளையும் பிள்ளைகள் தங்களுடைய பெற்றோரையும் கொன்று சாப்பிடுவார்கள்.+ நான் உங்களைத் தண்டித்து, மிச்சமிருக்கிற எல்லாரையும் நாலாபக்கமும் சிதறிப்போகச் செய்வேன்.”’+

  • எசேக்கியேல் 5:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 உன்னுடைய ஜனங்களில் மூன்றிலொரு பங்கினர் கொள்ளைநோயினால் அல்லது பஞ்சத்தினால் சாவார்கள். மூன்றிலொரு பங்கினர் உன்னைச் சுற்றிலும் வாளுக்குப் பலியாவார்கள்.+ மிச்சமிருக்கிற மூன்றிலொரு பங்கினரை நான் எல்லா திசைகளிலும் சிதறிப்போகப் பண்ணுவேன். அவர்களுக்குப் பின்னால் ஒரு வாளை அனுப்புவேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்